சேதமடைந்த வீதிகள், பாலங்களை சரிசெய்யும் வேலைத் திட்டம் ஆரம்பம்!

கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழையால் நாட்டின் பல வீதிகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்த நிலையில், அவற்றை சீரமைக்கும் வேலைத்திட்டம் இன்று தொடங்குவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

சேதமடைந்த பகுதிகள் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டு, உடனடி புனரமைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எஸ்.எம்.பி. சூரியபண்டார தெரிவித்தார்.

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மனம்பிட்டிய-அரலகங்வில பாலம் வெறும் இரண்டு நாட்களில் புனரமைக்கப்பட்டுள்ளதாகவும், இது அதிகாரிகள் இரவு பகலாக செய்த அர்ப்பணிப்பு காரணமாகவே சாத்தியமானதாகவும் குறிப்பிடப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.