போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது!

கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தென்னகும்புர பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் உட்பட இருவர் கண்டி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்டி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் கண்டி பலகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய ஆணொருவரும் குருணாகல் கெட்டுவான பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய பெண்ணொருவரும் ஆவர்.

சந்தேக நபர்களிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் சந்தேக நபர்களுக்கு எதிராக நீதிமன்றினால் பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.