மாணவி மரணம் – விசாரணையை விரைப்படுத்த ஆலோசனை

கொட்டாஞ்சேனை பகுதியில் ஒரு மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணையை துரிதப்படுத்தும் வகையில், பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ் விசாரணை குழுவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இன்று (மே 10) பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது, சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோர்கள் மற்றும் விசாரணை நடத்தும் பொலிஸாருடன் நேரில் பேசிய பிரதமர், இந்த விசாரணைகளை விதிமுறைப்படி, விரைவாகவும், பாரபட்சமின்றியும் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பாடசாலையிலும், மேலதிக வகுப்பிலும் நடந்த சம்பவங்கள் குறித்து தெளிவான மற்றும் நேர்மையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், இந்த சம்பவம் ஏற்பட்டபோது கல்வி அதிகாரிகள் எவ்வாறு செயல்பட்டனர் என்பதைக் கண்டறிய கல்வி அமைச்சின் ஊடாக ஒரு உள்நோக்க விசாரணையும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

மேலும், சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களில் தலையிட வேண்டிய அரச நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு மிகவும் பாழ்பட்ட நிலையில் உள்ளதாகவும், பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு சரியான பதிலளிப்பு அமைப்பு இல்லாததையும் பிரதமர் கவனித்துள்ளார்.

இதையடுத்து, இந்த நிலைமையை சீர்செய்யும் நோக்கில், குழந்தைகள் நல வைத்திய நிபுணர் அஸ்வினி பெர்னாண்டோ தலைமையில் மூன்று பேர் கொண்ட விசேட குழுவொன்றை பிரதமர் நியமித்துள்ளார், அவை தேவையான நடைமுறைகளை ஆய்வு செய்து பரிந்துரைகள் வழங்கவுள்ளது.

Related Articles

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.