யாழில் சைக்கிள் திருட்டு கும்பல் கைது!

யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கர வண்டிகளை திருடி வந்த கும்பலை சேர்ந்த நால்வர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ் . நகர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கர வண்டி காணாமல் போனமை தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் , சந்தேகநபர் ஒருவரை கைது செய்தனர்

கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், மேலும் மூவரை கைது செய்த போலீசார் , அவர்களிடமிருந்து 12 துவிச்சக்கர வண்டிகளை மீட்டுள்ளனர்

கைது செய்யப்பட்டுள்ள நால்வரையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.