யாழில் சோகம்! 8 மாத குழந்தை உயிரிழப்பு!

யாழில் மூச்செடுக்க சிரமப்பட்ட பெண் குழந்தை ஒன்று நேற்று உயிரிழந்துள்ளது.

சாவகச்சேரி, மீசாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த கேதீசன் கிஷாரா என்ற 8 மாதங்கள் நிரம்பிய பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தைக்கு ஏற்கனவே ஆஸ்துமா நோய் உள்ளது.

இந்நிலையில் நேற்றைய தினம் (22) பெற்றோர் குழந்தையை அழைத்து கொண்டு  பூநகரிக்கு சென்ற வேளை மூச்சு எடுப்பதற்கு குழந்தை சிரமப்பட்டுள்ளது.

பெற்றோர் குழந்தையை பூநகரி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை வைத்தியர்கள் குழந்தையை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றினர்.

பின்னர் குழந்தை அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை குழந்தை உயிரிழந்தது.

Related Articles

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.