பெரும் தொகை ஹெரோயினுடன் யாழில் 27வயது இளைஞன் கைது
யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை பகுதியை சேர்ந்த 27 வயது இளைஞன், 60 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் இன்று காலை யாழ்ப்பாண குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
இது, யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின் கைப்பற்றப்பட்ட பெரும் அளவிலான ஹெரோயினாக கருதப்படுகிறது.
கைது செய்யப்பட்ட இளைஞரை விசாரணைக்காக தடுத்து வைத்து, மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.