கஜேந்திரன், வேலன் சுவாமி ஆகியோர் மீது விசாரணை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், தவத்திரு வேலன் சுவாமிகள் ஆகியோரை வாக்குமூலம் அளிக்க பலாலி பொலிஸாரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றக்கோரி நடாத்திய போராட்டம் தொடர்பாக வாக்குமூலம் சேகரிக்க பொலிஸாரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பலாலி பொலிஸ் நிலையத்திற்கு நாளைய தினம் வியாழக்கிழமை நண்பகல் 12 மணிக்கு இருவரையும் ஆஜராகுமாறு பொலிஸாரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.