சிங்கள சிப்பாய் ஒருவருக்கு 14வருடத்தின் பின் மரண தண்டனை!

தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமனாகும் என தமிழ் மக்கள் உலக விசாரணையை தொடர்ந்து மறுத்தே அருகின்றனர்.

இந்நிலையில் சக இராணுவ சிப்பாய்கள் இருவரை சுட்டு கொலை செய்த  சக இராணுவ சிப்பாய்க்கு 14வருடங்களின் பின் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கடந்த 02 ஒக்டோபர்2009 அன்று மன்னார் பரப்புக்கடந்தான் இராணுவ முகாமில் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய்க்கு 14 வருடங்களின் பின் நேற்று புதன்கிழமை (6) மன்னார் மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மன்னார் மேல் நீதிமன்றத்தில் விசாரணைகளின் இடம்பெற்று வந்த நிலையில் நேற்றையதினம் குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ சிப்பாயை கண்டி போகம்பரை சிறைச்சாலைக்கு அனுப்பும்படி கட்டளை விதிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.