மஹா சிவராத்திரிக்கு மறுநாள் வடக்கு பாடசாலைகளுக்கு விடுமுறை

வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் மஹா சிவராத்திரிக்கு மறுநாள் வியாழக்கிழமை (27) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார்.
இந்த விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் 01 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலை நடைபெறுமென்றும் ஆளுநர் தெரியப்படுத்தியுள்ளார்.