பிரதமர் ஹரிணி அமரசூரிய கனடாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்!!

பொதுநலவாய நாடுகளின் கற்றல் ஆலோசனை குழுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று செவ்வாய்க்கிழமை (24) அதிகாலை கனடாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
பொதுநலவாய நாடுகளின் கற்றல் ஆலோசனை குழுக்கூட்டம் ஜூன் 24 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை கனடாவின் வான்கூவர் நகரத்தில் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களின் கல்வி , உயர்கல்வி உயர்கல்வி , கல்வி அபிவிருத்திகள், டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவை தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
இந்த கூட்டத்தில் நிறுவனங்களில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல், பாலின சமத்துவம், அபிவிருத்திக்கான முதலீடு ஆகியவை தொடர்பில் விவாதங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.