சட்டவிரோத மாணிக்க கல் அகழ்வில் மூவர் கைது!
மஸ்கெலியா, நுவரெலியா மற்றும் சோலகந்த தோட்டப்பகுதியில் அனுமதியின்றி மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மஸ்கெலியா பொலிஸாரின் சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் மஸ்கெலியா அப்கட் பகுதியில் இருந்து கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து அகழ்வுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகள் நடைபெறுகின்றன.