பலூன் சின்னத்தில் போட்டியிடும் அரகலயா குழு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பலூன் சின்னத்தில் அரகலய மக்கள் இயக்கத்தின் செயற்பாட்டாளர்கள் குழுவொன்று போட்டியிடவுள்ளது.

கொழும்பில் முதலில் அதிகாரத்தை நிலைநாட்டுவதும், அதன் பின்னர் அமைப்பை மாற்றுவதும் குழுவின் நோக்கம் என்று செய்தியாளர்களிடம் பேசிய ஆர்வலர் தனேஷ் அலி கூறினார்.

இந்த குழு தேர்தலுக்கான கட்டுப்பணத்தை வெற்றிகரமாக செலுத்தியுள்ளதாக ஸ்ரீலங்கா சோசலிச கட்சியின் செயலாளர் மகிந்த தேவகே ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

கட்சி செயற்பாட்டாளர் குழுவை ஆதரிப்பதாகவும், கொழும்பு மாநகர சபைக்கு போட்டியிடுவதற்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவித்த அவர், கொழும்பு அரகலயத்திற்கு சொந்தமானது எனவும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.