10 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது

தமிழகத்தின் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் மன்னார் தெற்கே மீன்பிடியில் ஈடுபட்ட போது  இலங்கை கடற்படையினரால் இன்று திங்கட்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 10 மீனவர்களுடன் அவர்களது இயந்திரப் படகும் மன்னார், தல்பாடு கடற்பகுதிக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்ட மீனவர்கள், படகுடன் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

கடந்த ஜனவரி 26, ஞாயிற்றுக்கிழமை, ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சிமடத்தை சேர்ந்த 34 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததுடன், மூன்று மீன்பிடி படகுகளையும் கைப்பற்றியது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் கிளிநொச்சி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜனவரி 28, செவ்வாய்கிழமை நடந்த மற்றொரு சம்பவத்தில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மேலும் 13 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர், மேலும் அவர்களது இயந்திர படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

யூன் 16, 2024 முதல், இலங்கை கடற்படையினர் 425 தமிழக மீனவர்களை சிறைபிடித்து, 58 மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

2018 ஆம் ஆண்டு முதல் சுமார் 270 இழுவை படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தமிழக மீனவர் தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.

Related Articles

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.