மின்சார வேலியில் சிக்கி குடும்பஸ்தர் பலி: மற்றொருவர் காயம்!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள பன்சேனை கிராமத்தில் யானை பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட  மின்சார வேலியில் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (03) இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் 39 வயதுடைய முதலைக்குடா பகுதியில் வசிக்கும் இரு பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிசார் மேலதிக  விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கிராம உத்தியோகத்தரால் மார்கழி மாதப் பகுதியில் ஒலிபெருக்கி மூலம் காட்டு யானை பாதுகாப்புக்காக  சட்டவிரோத மின்சார வேலியினை அமைக்க வேண்டாமென அறிவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.