யாழில் மதுபோதையில் சைக்கிள் ஓடியவருக்கு 25ஆயிரம் தண்டம்

யாழ்ப்பாணம் அச்சுவேலியைச் சேர்ந்த நபர் ஒருவர், மது போதையில் சைக்கிள் செலுத்தியமைக்காக 25 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அச்சுவேலி பொலிஸார், மது போதையில் சைக்கிள் ஓட்டிய குற்றத்திற்காக குறித்த நபரை கைது செய்து, மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கு விசாரணையின் போது, குற்றச்சாட்டை குறித்த நபர் ஏற்றுக்கொண்டதை அடுத்து, நீதிமன்றம் அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது.
இந்த தீர்ப்பு, போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு எச்சரிக்கையாக அமையும் என கணிக்கப்பட்டுள்ளது.