அதிஷ்டம் கிடைத்துள்ளதாக வடமராட்சியில் பெருந்தொகை பணம் மோசடி

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில், முதியவர்கள் இருவரின் வங்கி கணக்கில் இருந்து தொலைபேசி மூலம் பணம் திருடப்பட்டது.
உடுத்துறை பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் அதிஷ்ட சீட்டிழுப்பில் பரிசு வென்றதாக கூறி, அவரிடம் தொடர்பு கொண்ட கும்பல், அவரின் தொலைபேசிக்கு வந்த வங்கி OTP (கடவுச்சொல்) பயன்படுத்தி, ரூ.2 இலட்சம் பணத்தை திருடியது.
அதேபோன்று, மற்றொரு முதியவரிடம் தொடர்பு கொண்டு, அதே முறையில் வங்கி தகவல்களை பெற்ற கும்பல், அவரது கணக்கில் இருந்து ரூ.29 இலட்சத்து 22 ஆயிரம் பணத்தை திருடியது.
இது தொடர்பான புகாரை பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸில் பதிவு செய்துள்ளனர். தற்போது, பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை: தொலைபேசியில் பெறப்படும் வங்கி OTP-யை (கடவுச்சொல்) எவருக்கும் பகிர வேண்டாம். உங்கள் தனிப்பட்ட வங்கி தகவல்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.