4 வயது பிள்ளையுடன் நீர்த்தேக்கத்தில் பாய்ந்த தாய்
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில், 4 வயது குழந்தையுடன் தாய் ஒருவர் 16ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் நீர்த்தேக்கத்தில் குதித்தார்.
இந்தச் சம்பவத்தில் தாய் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 4 வயது குழந்தையை தேடும் பணி இன்னும் தொடர்கிறது.
அக்கரபத்தனை எல்பியன் தோட்டத்தை சேர்ந்த இந்தப் பெண் தலவாக்கலை தெவிசிரிபுற பகுதியில் வசித்து வந்தார். கணவனை விட்டு 7 ஆண்டுகளாக பிரிந்து, இன்னொருவருடன் வாழ்ந்து வந்த நிலையில், தனது குழந்தையுடன் இந்த முடிவை எடுத்ததாக அறியப்பட்டுள்ளது.
நீர்த்தேக்கத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த அவரை பிரதேசவாசிகள் காப்பாற்றி, தலவாக்கலை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். பின்னர், சிகிச்சைக்காக அவரை லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.