பிரித்தானிய உயர்ஸ்தானிகர் தமிழரசு பொது செயலாளருடன் சந்திப்பு

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பெட்ரிக் (Andrew Patrick) இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனை இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சுமந்திரனிடம் தற்போதைய அரசியல் நிலை தொடர்பாக கேட்டறிந்ததோடு, வடக்கின் பொருளாதார நிலை மற்றும் சமூக பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடினார்.
இது தொடர்பில் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் தனது எக்ஸ்தளத்தில் நேற்று நான் தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் சுமந்திரனை சந்தித்தேன். வடக்கின் அரசியல் முன்னேற்றங்கள், பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்த விவாதத்திற்காக. நல்லிணக்கம் மற்றும் உள்ளடக்கிய நிர்வாகத்திற்கான இங்கிலாந்தின் உறுதிப்பாட்டை நான் மீண்டும் உறுதிப்படுத்தினேன் என்று பதிவிட்டார்.