யாழ் வடமராட்சியில் கரையொதுங்கிய பெளத்த மிதவை

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று புதன்கிழமை ஒரு மிதவை கரையொதுங்கியுள்ளது.
நாகர்கோவில் கடற்கரையை அருகிலுள்ள பகுதியில் காணப்பட்ட இந்த மிதவையில் புத்தர் சிலையும் பௌத்த மத அடையாளங்களும் இருந்ததால், அது மியான்மார் நாட்டிலிருந்து வந்திருக்கலாம் என அந்த பகுதியில் உள்ள மக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.