யாழில் போலி சாரதி அனுமதி பத்திரத்துடன் கனேடிய பிரஜை கைது
போலி சாரதி அனுமதிபத்திரத்துடன் கனேடிய பிரஜாவுரிமை பெற்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் நீண்ட காலமாக கனடாவில் பிரஜாவுரிமை பெற்று வசித்து வரும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் யாழ்ப்பாணம் வந்திருந்த போது தற்காலிக சாரதி அனுமதி பத்திரத்தினை பெற்றுள்ளார்.
பின் கனடா சென்று, மீண்டும் அண்மையில் யாழ்ப்பாணம் வந்திருந்த நிலையில் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு சென்று தன்னுடைய தற்காலிக சாரதி அனுமதி பத்திரத்தை புதுப்பிக்க முயன்ற வேளை அது போலியான அனுமதி பத்திரம் என அதிகாரிகள் கண்டறிந்தனர்.
அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, போலி அனுமதி பத்திரத்தை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.