இலங்கை வருகிறார் இந்திய பிரதமர்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளதாக சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க, நாட்டின் பாதுகாப்பு நிலைமை சீராக உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.
சித்திரை புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்பாக நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
இந்த விஜயத்திற்கான இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் இந்தியா மற்றும் இலங்கை இடையே நடைபெற்று வருகின்றன.
இரண்டு நாட்கள் விஜயமாக இலங்கை வரும் இந்திய பிரதமர், ஒரு இரவு கொழும்பில் தங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.