இறுதி யுத்தத்தில் காணாமல் போன மோட்டார் சைக்கிளை வைத்து காலியில் குற்றம்!! உரிமையாளருக்கு நீதிமன்றம் அழைப்பாணை!!

2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி போரின்போது முள்ளிவாய்க்கால் பகுதியில் மோட்டார் சைக்கிளை இழந்த கிளிநொச்சியைச் சேர்ந்த உரிமையாளர் ஒருவருக்கு நேற்று காலி நீதிமன்றத்தில் இருந்து அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த மோட்டார் சைக்கிள் முள்ளிவாய்க்காலில் விடப்பட்ட நிலையில் அது படையினரின் பிடியில் இருந்து காணாமல் போயிருந்த்து.

போர்க் காலத்தில் காணமல்போன மோட்டார் சைக்கிளை உரிமையாளர் நீண்ட காலம் தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் கடத்தல் சம்பவம் ஒன்றுடன் குறித்த மோட்டார் சைக்கிள் தொடர்புபட்டு மீட்கப்பட்டுள்ளமையால் உரிமையாளரை நாளை 8ம் திகதி மன்றில் ஆஜராகுமாறு  காலி நீதிமன்றம் மோட்டார் சைக்கிள் உரிமையாளருக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது.

இறுதி யுத்தத்தின்போது தமிழ் மக்களால் முள்ளிவாய்க்காலில் கைவிடப்பட்ட பல நூறு வாகனங்கள் படையினரின் துணையுடன் தென்னிலங்கைக்கு எடுத்துச் செல்லப்பட்டன என்று ஏற்கனவே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.