மின்கட்டணம் 20 வீதத்தால் குறைப்பு

இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு, மின்கட்டணத்தை 20 சதவீதத்தால் குறைக்க அனுமதி வழங்கியுள்ளது.
இந்தக் குறைப்பை எதிர்வரும் 6 மாத காலத்திற்கு அமுல்படுத்துமாறு, இன்று நள்ளிரவு முதல் செயல்படுத்த இலங்கை மின்சார சபைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஹோட்டல்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழிற்துறையின் மின்கட்டணத்தை 31 சதவீதத்தால் குறைக்கவும் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
இந்த நடவடிக்கைகள் மக்கள் மற்றும் தொழிற்துறைக்கான நிவாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.