ஹட்டன் – கண்டி வீதியில் கவிழ்ந்தது பஸ் – மூவர் பலி
ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்து இன்று சனிக்கிழமை விபத்துக்கு உள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
பஸ் வீதியை விட்டு விலகி அருகில் உள்ள தேயிலை தோட்டத்தில் கவிழ்ந்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் காயமடைந்தவர்கள் திக் ஓயா மற்றும் வட்டவளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பஸ் விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் 47பேர் காயமடைந்துள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.