திடீரென தீப்பற்றி எரிந்த பஸ்ஸிற்குள் நித்திரையில் இருந்தவர் பலி

அநுராதபுரம் ஜேதவனராமைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்ட பஸ் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பஸ்ஸில் உறங்கிக் கொண்டிருந்த எம்பிலிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய நபரே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
பலாங்கொடையில் இருந்து அநுராதபுரம் பழைய நகரத்திற்கு யாத்திரைக்காக இந்த பஸ் வந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.