தமிழக மீனவர்களுக்கு 09 மாத சிறை, 40 இலட்ச ரூபாய் தண்டம்

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களில் இருவருக்கு 9 மாத சிறைத் தண்டனையும், தலா ரூ.40 இலட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏனைய 6 மீனவர்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் கடந்த 8ஆம் திகதி, இரண்டு படகுகளில் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்ததாக கைது செய்யப்பட்டனர். மறுநாள் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இந்த 8 பேரும், அதற்கு பிறகு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

நேற்று (வியாழக்கிழமை) நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை நடந்தபோது, படகோட்டிகளுக்கு கடுமையான தண்டனையும், மற்றவர்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

Related Articles

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.