598 மில்லியன் பவுண்டுகள் பெறுமதியான பிட்காயின்கள்: குப்பைக்குள் தேடமுடியாது என்றது நீதிமன்றம்!

பிட்காயின் இழப்பு: ஜேம்ஸ் ஹோவெல்ஸ் வழக்கில் உயர் நீதிமன்றம் மேல்முறையீட்டை நிராகரிப்பு

பிரித்தானியாவில் 2013 ஆம் ஆண்டில் 8,000 யூனிட்கள் கொண்ட பிட்காயின்களை தற்செயலாக குப்பையில் தூக்கி எறிந்ததாக ஜேம்ஸ் ஹோவெல்ஸ் என்ற நபர் கூறியுள்ளார். இவை கொண்டிருந்த ஹார்ட் டிரைவ் குப்பை கொட்டும் இடத்தில் புதைக்கப்பட்டதாக அவர் தெரிவிக்கின்றார். தற்போதைய மதிப்பில் அந்த பிட்காயின்களின் மொத்தம் சுமார் £598 மில்லியன் ஆகும்.

குறித்த ஹார்ட் டிரைவை தேட அனுமதி கோரிய அவரது கோரிக்கைகள் பலமுறை நிராகரிக்கப்பட்டன. நியூபோர்ட் சிட்டி கவுன்சில் அதிக செலவுகள் மற்றும் மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் ஆபத்து காரணங்களைக் காட்டி அனுமதிக்க மறுத்தது.

இதனைத் தொடர்ந்து, ஜேம்ஸ் ஹோவெல்ஸ் மேல்முறையீடு செய்ய முயன்றார். எனினும், இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் உயர் நீதிமன்றம் அவரது மேல்முறையீட்டை நிராகரித்தது.

உயர் நீதிமன்ற நீதிபதி ஆண்ட்ரூ கீசர் தனது தீர்ப்பில், “இந்த வழக்கிற்கும் ஹார்ட் டிரைவ் இழப்புக்கும் இடையே மிகவும் அதிக கால இடைவெளி உள்ளது. மேலும், இந்த வழக்கு வெற்றி பெறுவதற்கான யதார்த்த வாய்ப்பு இல்லை” என்று கூறினார்.

இந்த முடிவுக்கு பதிலளித்த ஜேம்ஸ் ஹோவெல்ஸ், “இந்த வழக்கில் நான் நீதி பெறுவதற்கான வாய்ப்பை கூட பெறவில்லை. முழுமையான விசாரணையின்போது இன்னும் பல விடயங்களை விளக்க முடியுமென நான் நம்பினேன்,” என்று தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

இந்த சம்பவம், கிரிப்டோகரன்சியின் மதிப்பு வளர்ச்சியால் நிகழ்ந்த சிக்கல்களையும், அதற்கான தாமதமான சட்ட நடவடிக்கைகளின் விளைவுகளையும் பிரதிபலிப்பதை காட்டுகிறது.

Related Articles

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.