வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ கைது

வெனிசுலா ஊடகங்களும் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவின் குழுவும், மச்சாடோ வியாழக்கிழமை கராகஸில் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளன.
தலைமறைவாக இருந்து வந்த மச்சாடோ, ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் மூன்றாவது பதவியேற்புக்கு எதிராக நடப்பதற்காக கராகஸில் தனது முதல் பொது நிகழ்வில் தோன்றினார்.
மச்சாடோ பேரணியில் இருந்து வெளியேறும் போது தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், அவரை உந்துருளியில் வெளியேற்றும் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் எதிர்க்கட்சியினர் சமூக ஊடகங்களில் புகார் செய்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் ஜனாதிபதி மதுரோவின் பதவியேற்புக்கு முன்னதாக, வெனிசுலா முழுவதும் பதினோராவது மணிநேர போராட்டங்களை எதிர்க்கட்சிகள் நடத்தி வருகின்றன.